இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே தாங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட பணத்தை சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நிம்மதியான எதிர்காலத்திற்கும் வயதான பிறகு யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் வாழவும் சேமிப்பு என்பது அவசியம். அவ்வாறு சேமிக்க விரும்புபவர்களுக்காக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில் தபால் அலுவலகத் திட்டத்தில் இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் குறைந்த முதலீட்டில் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.
போஸ்ட் ஆபீஸ் ஃபிக்ஸட் டெபாசிட் அரசாங்க திட்டம் என்பதால் முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படும். தற்போது வருடத்திற்கு 6.9% வட்டி விகிதமும், 2 வருட முதலீட்டுக்கு ஏழு சதவீதமும், மூன்று ஆண்டுகளுக்கு 7.1 சதவீதமும், ஐந்து வருட டெபாசிட்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் ஒருவர் ஒரு முறை 6 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது ஐந்து வருடம் முதலீட்டுக்கு 7.5% வட்டி விகிதத்தில் 2,69,969 ரூபாய் தொகை வருமானமாக கிடைக்கும். இதன் மூலம் அசல் தொகையுடன் சேர்த்து மொத்தமாக 8,69,969 மெச்சூரிட்டி தொகையாக முதலீட்டாளர்கள் பெறலாம். முதலீடு செய்யப்படும் தொகையை பொறுத்து ரிட்டன் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அடிக்கடி வட்டி விகிதங்கள் மாற்றப்படும். அசல் தொகையுடன் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கணக்கில் வட்டி சேர்க்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தபால் நிலையங்களில் ஆயிரம் ரூபாய் செலுத்தி டெபாசிட் டெபாசிட் கணக்கு தொடங்கலாம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…