தமிழக வெற்றிக் கழகத்தினரின் கடும் கண்டனங்களுக்கு மத்தியிலும், பொன்ராஜ் தனது அவதூறு பேச்சில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தான் பேசியதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும், விஜய்க்கு பொண்டாட்டியாக இருப்போம் என்று சொல்பவர்களை ‘விபச்சாரி’ என்று சொன்ன வார்த்தையைத் திரும்பப் பெறப் போவதில்லை என்றும் அவர் பிடிவாதமாகக் கூறியுள்ளார். அப்படிச் சொன்னால்தான் அவர்களுக்கு அந்த வலி புரியும் என்பதால் தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களைப் பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமாகச் சாடிய பிறகும், அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பொன்ராஜ் பேசி வருவது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நாகரிகம் இன்றிப் பேசும் இத்தகைய நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுவாக எழுந்து வருகிறது.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “பெண்களை இழிவாகப் பேசினால் சும்மா இருக்க மாட்டோம்” என எச்சரித்துள்ள நிலையில், பொன்ராஜின் இந்தத் தொடர் பிடிவாதம் இரு தரப்பிற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
