“கடற்கரை மணலில் நீட்டியிருந்த பெண்ணின் கால்”… நாய்கள் கடித்தபோது வெளிவந்த பகீர் உண்மை… நள்ளிரவில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்….!

By Nanthini on சித்திரை 30, 2026

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை கடற்கரை மணலில் புதைக்க முயன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 24 வயதான முகமது என்பவருக்கும், 22 வயதான பாத்திமா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ள நிலையில், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான முகமது, தனது மனைவியின் நடத்தையில் தொடர்ந்து சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முகமது தனது துப்பட்டாவால் பாத்திமாவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், கொலையை மறைப்பதற்காக நள்ளிரவு நேரத்தில் பாத்திமாவின் உடலை பொன்னானி துறைமுகம் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு உடலை மணலில் அரைகுறையாகப் புதைத்துவிட்டு முகமது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

   

மறுநாள் காலையில் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், மணலில் இருந்து பெண்ணின் கால் மட்டும் வெளியே தெரிவதையும், அதைத் தெரு நாய்கள் கடித்து இழுப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், அது பாத்திமா என்பது உறுதியானது. இது தொடர்பாக முகமதுவிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தாலும், இறுதியில் சந்தேகத்தால் மனைவியைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

   

தற்போது முகமதுவை கைது செய்துள்ள போலீசார், பாத்திமாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போதை மற்றும் தேவையற்ற சந்தேகத்தால் ஒன்றரை ஆண்டுகளிலேயே ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை பறிபோனதுடன், ஒரு பச்சிளம் குழந்தை தாயை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.