பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் மக்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் என்பது அதிகமாகவே இருக்கும். அதனால் மக்கள் சிரமமின்றி பயணிப்பதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
அதன்படி பொங்கல் விடுமுறைக்கு சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் மற்றும் தாம்பரம் வரையில் ஜனவரி 11, 18, குமரி – தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளிலும், செங்கல்பட்டியில் இருந்து நெல்லை ரயில் ஜனவரி 9,15 ஆகிய தேதிகளிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் ஐ ஆர் சி டி சி இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
