தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் ரொக்க படமும் வழங்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகையின் போது வேட்டி சேலை வழங்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் உள்ள நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடனும் ஒவ்வொரு வருடமும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
இதனிடையே இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு அரசு பரிசுத்தொகை வழங்கவில்லை. ஆனால் 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பதாக அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது டிசம்பர் 12ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பச்சரிசி மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் பரிசுத்தொகை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
