தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆண்டை நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசில் ரொக்க பணம் வழங்கப்படவில்லை. இதனுடைய 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்ட இரண்டாவது வாரத்தில் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பரிசு தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி சேலை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இருக்கும் எனக் கூறப்படுகிறது. முக்கியமாக 3000 ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
