தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், கோவை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்டார்பக்ஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி, “பொங்கல் பரிசு” அல்லது “கூப்பன்கள்” காத்திருப்பதாகக் கூறி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள் போலியான லிங்குகளை (Links) பரப்பி வருகின்றனர். இந்த லிங்குகளை கிளிக் செய்யும் போது, ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை பரிசு கிடைக்கும் என்று ஆசை காட்டி மக்களின் வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடி மோசடி செய்ய முயற்சிகள் நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தாங்கள் இது போன்ற எந்த ஒரு சலுகையையும் அறிவிக்கவில்லை என்றும், இச்செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற அறிமுகமில்லாத இணையதள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான தகவல்களை மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பணத்தை இழக்கும் அபாயம் உள்ளதால் விழிப்புடன் இருக்குமாறும், மோசடி தொடர்பான புகார்களுக்கு உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தவெக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தலைவர் விஜயைப் பார்ப்பதற்காக, திருச்சியில் இருந்து…
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுராவில், இரண்டு குழந்தைகளின் தாயான தேஜஸ்வினி என்ற பெண் தனது காதலனாலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள சூழலில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த…
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4, 2026) தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்…
பெங்களூருவின் புறநகர் பகுதியான அனேகல் தாலுகாவில், ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினரின் வாழ்க்கை சோகத்தில்…
மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், அங்குள்ள வளைகுடா நாடுகளில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றுள்ள…