2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி குறித்த நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் முதல்முறையாக ‘பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி’ மற்றும் அமைச்சரவையில் இடங்களை அமித் ஷா கோரியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வரும் தேர்தலில் அதிமுகவிடம் சுமார் 54 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும், குறிப்பாகக் கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் அதிக இடங்களை ஒதுக்கீடு செய்ய அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் இந்த அதிரடியான நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அமித்ஷாவின் யோசனையை இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், தொகுதிப் பங்கீடு மற்றும் துணை முதல்வர் பதவி குறித்த விவகாரம் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவின் பலத்தை விட அதிக இடங்களையும், அதிகாரப் பகிர்வையும் அக்கட்சி கோருவது அதிமுகவின் செல்வாக்கை பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் அதிமுக தலைமை கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…