MGR – சிவாஜி இடையே நடந்த மோதல்.. வில்லனாக வந்தது யார் தெரியுமா..? சிவாஜியே சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்..

By Sumathi

Updated on:

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜீத் என ஒவ்வொரு தலைமுறையிலும் இரண்டு நடிகர்கள் போட்டியாளர்களாக இருப்பது தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இந்த ஜோடிகளை பொருத்த வரை திரையில்தான் மோதிக்கொள்கிறார்களே தவிர, நேரில் ஒருமுறை கூட அவ்வாறு நடந்தது இல்லை. அதிலும் ரஜினி கமல் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் சகோதர பாசத்தை வெளி்பபடுத்துகின்றனர். விஜய் அஜீத் இருவரும் நல்ல நண்பர்களாகதான் இருந்து வருகி்னறனர்.

   

ஆனால் எம்ஜிஆர் சிவாஜி அந்த காலகட்டத்தில் கடும் போட்டியாளர்களாக திரைப்படங்களில் இருந்தனர். ஆனால் உண்மையில் அவர்கள் இருவருமே மிக நெருக்கமான நண்பர்கள். இருவரும் நடிக்க துவங்கிய காலத்தில் இருந்து பெரிய நட்சத்திரங்களாக மாறிய பின்பும் அவர்களுக்குள் அந்த நட்பு எப்போதுமே உறுதியாகவே இருந்தது.

எம்ஜிஆர் சிவாஜி நடித்த படங்கள் தியேட்டர்களுக்குள் மோதிக் கொள்ளும். தியேட்டர்களுக்கு வெளியே எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். எம்ஜிஆர் பட போஸ்டர்களை சிவாஜி ரசிகர்கள் கிழித்து எறிவதும், சிவாஜி பட போஸ்டர்கள் மீது எம்ஜிஆர் ரசிகர்கள் சேறை வாரி இறைப்பதும் அடிக்கடி நடந்திருக்கிறது.

ஆனால் எம்ஜிஆர் சிவாஜியும் நேரடியாக மோதிக்கொள்ளவே மாட்டார்கள். அப்படிப்பட்ட எம்ஜிஆரையும் சிவாஜியையும் மோதிக் கொள்ள செய்யும் ஒரு நபர் அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்தார். டாக்டர் பட்டம் பெற்ற எம்ஜிஆருக்கு நடந்த பாராட்டு விழாவில், இதுகுறித்து நடிகர் சிவாஜியே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

நாங்கள் ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள். ஒரே தாயின் கையில் உணவு உண்டவர்கள். அப்போது யாராலும் எங்களை பிரிக்க முடியவில்லை. ஆனால் இந்த அரசியல் எங்களை பிரித்து விட்டது. அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டது போன்ற உணர்வை, அரசியல் எங்களுக்குள் உருவாக்கி விட்டது. இதுதான் சிவாஜி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Sumathi