கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ஏன்? என்று விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் அதை மீறுவதா? எனவும், எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி, SIT விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தவெகவினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், எலியிடம் இருந்து தப்பித்து புலியிடம் விஜய் வசமாக சிக்கிக் கொண்டதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனாம் செய்து வருகின்றனர். அதாவது, சிபிஐ விசாரணை மூலம் பாஜகவின் பிடியில் விஜய் சிக்கியிருப்பதாக கூறுகின்றனர். மறுபுறம், எதையும் துணிந்து எதிர்கொள்வோம் என்று தவெகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.
