அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. CM விஜய்க்கு அரங்கேறிய அரசியல் சதி வேலை…!!

By Swetha on வைகாசி 27, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் அவரது ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் ஓ.எஸ்.டி. (OSD) பதவியிலும், ஜான் ஆரோக்கிய சாமி அரசியல் ஆலோசகராகவும், தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி பொது நிகழ்வுகளின் ஆலோசகராகவும் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்கள் தவெக ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே நிலவும் உள்கட்சி அதிகாரப் போட்டியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. அரசு நிர்வாகத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பிய ஜான் ஆரோக்கிய சாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் அவர்களுக்குப் பின்னணியில் இருந்த ஆதவ் அர்ஜுனா ஆகிய மூவர் அடங்கிய கோஷ்டி, ஜோதிடரின் நியமனத்தால் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அஞ்சியது.

ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் நியமன உத்தரவு மட்டுமே முதலில் பொதுவெளியில் கசிந்த நிலையில், அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அந்த மூவர் கோஷ்டி திட்டமிட்டது. தங்களின் ஊடகத் தொடர்புகள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்கள் மூலமாக “அரசு நிர்வாகத்தில் ஜோதிடரா? மூடநம்பிக்கையை அரசு ஊக்குவிக்கிறதா?” என்ற விவாதங்களை வேண்டுமென்றே கிளப்பிவிட்டனர். இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளால் சட்டமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டு கடும் கண்டனங்கள் எழுந்ததால், ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக முதலமைச்சர் விஜய் தனது ஜோதிடரின் நியமன உத்தரவை ரத்து செய்ய நேரிட்டது.

   

இந்த அதிரடி நகர்வுகள் கடந்த வாரம் தலைமைச் செயலக (கோட்டை) அதிகாரிகள் மத்தியில், குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மதிய உணவு இடைவேளையின் போது தீவிரமாக விவாதிக்கப்படும் முக்கியத் தலைப்பாக மாறியது. ஜோதிடரின் நியமன ரத்ததை எதிர்க்கட்சிகள் தங்களின் மக்கள் அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கொண்டாடி வரும் வேளையில், அதிகார வட்டாரங்களோ வேறு ஒரு உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. முதலமைச்சருக்கு ஜோதிடர் ரத்தன் பண்டிட் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை என்றும், இந்த ரத்து முடிவு தற்காலிகமானது மட்டுமே என்றும் கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.