அடக்கடவுளே..! 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன கணவர்… திடீரென போலீசார் முன்பே மாடியிலிருந்து குதித்து மனைவி தற்கொலை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

By Soundarya on ஐப்பசி 14, 2025

Spread the love

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருந்து ஒரு மனதை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,  .  லிவிங் உறவில் ஏற்பட்ட துரோகம் காரணமாக, ஒரு பெண் ஒரு கட்டிடத்தில் ஏறி ஒரு  குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சுனிதா சவுகான் (45)  என்ற பெண்  நர்மதாபுரம், இடார்சியில் வசித்து வந்தார். அவரது கணவர் அஜய் சவுகான் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் பின்னர், அவர் ஒரு இளைஞனுடன் காதல் கொண்டார். இந்த உறவின் காரணமாக, அவர் தனது காதலனுடன் லிவ்-இன் உறவில் வாழ சுமார் எட்டு நாட்களுக்கு முன்பு போபாலுக்கு வந்தார். இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று சுனிதா தனது லிவ்-இன் பார்ட்னருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். சிறிது நேரத்திலேயே, அருகில் கட்டப்பட்டு வந்த இரண்டு மாடி வீட்டின் கூரையில் ஏறினார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடனடியாக  அந்தப் பெண்ணை கீழே இறங்கச் செய்ய முயன்றனர், ஆனால் அவர் கட்டிடத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.