உத்தரகாண்ட் மாநிலம் அல்மோடா மாவட்டத்தின் மாஜ்காலி மற்றும் தாரிகேத் பகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ஷ்யாம் சிங் என்பவர் சுற்றித் திரிந்து வந்துள்ளார். ராணிகேத் அருகே உள்ள மாஜ்காலி காவல் சாவடியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் வினோத் பர்த்யால் என்பவரால் அவர் மீட்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவரிடம் குடும்பத்தைப் பற்றிக் கேட்டபோது தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அதிகாரி வினோத் பர்த்யால் அவரிடம் ஒரு டைரியையும் பேனாவையும் வழங்கி, அவரது கடந்த காலத்தைப் பற்றி ஏதேனும் நினைவிருந்தால் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அதை ஏற்று ஷ்யாம் சிங் “ராஜ்பூர்” என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் எழுதினார்.
அந்த ஒற்றைச் சொல்லின் உதவியுடன், ஃபரூகாபாத் மாவட்டத்திலுள்ள “ராஜ்பூர்” காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, 10 ஆண்டுகள் கழித்து ஷ்யாம் சிங்கை அவரது குடும்பத்தினருடன் காவல்துறையினர் வெற்றிகரமாகச் சேர்த்தனர். நிகழ்வைக் கண்ட இணைய பயனர் ஒருவர், “காவல்துறையின் மிகப்பெரிய சாதனை என்பது எப்போதும் கைது செய்வதோ அல்லது வழக்குகளை முடிப்பதோ அல்ல; மீண்டும் காண்போம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்ட குடும்பத்திற்கு, அவர்களின் உறவினரைக் கண்டுபிடித்துத் தருவதே ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…
தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர்…
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…