மராட்டிய மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உமர்கா பகுதியில் உள்ள தல்மோத் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த மோகன் ஜாதவ் என்ற அந்த காவல் அதிகாரி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்தார். சக அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பே உயிரிழப்பிற்குக் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்காக இறுதிவரை பணியாற்றிய அந்த அதிகாரியின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக காவலர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இந்திய விமானப்படை (IAF) சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. "இந்தியா…
மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச்…
மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…
மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…