தவெக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்த பெரும் புகாரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்ய போலீஸார் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே போலீஸார் தற்போது இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான பண்ணை வீடுகளில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் வேளையில், அவரது சகோதரர் ஏற்கனவே தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சதித் திட்டம் மற்றும் அடுத்தடுத்த போலீஸ் சோதனைகள் தற்போதைய அரசியல் சூழலில் பெரும் உஷ்ணத்தைக் கிளப்பியுள்ளன.
