அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி லட்சுமி பிரியா. இந்த தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவருமே காவல்துறையில் வேலை பார்த்து வந்தனர். தற்போது லட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி காவல் நிலையத்தில் அணிவகுப்பு நடைபெற்ற போது உதவி ஆய்வாளான லட்சுமி நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் சக போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
கதவை திறக்காததால் உரிமையாளரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த சக போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லட்சுமி பிரியா தனது காவல் சீருடை அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார். அப்போது மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி லட்சுமி பிரியா சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…