உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸைச் சேர்ந்த சாருல் என்ற பெண், தனது கணவரான காவலர் ஹரிஷ் குமார் ராவத் மீது வரதட்சணைக் கொடுமை, உடல்ரீதியான தாக்குதல் மற்றும் பிற பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2022 ஏப்ரலில் ரூ. 30 லட்சம் செலவில் நடைபெற்ற இவர்களது திருமணத்தின் ஆரம்ப மாதங்களில் சுமுகமான உறவு நிலவியுள்ளது. ஆனால், 2024 ஆகஸ்டில் இவர்களுக்கு மகள் பிறந்த பிறகும், ஹரிஷ் குமார் உத்தரப் பிரதேச காவல்துறைக்கு மாற்றப்பட்ட பிறகும் அவரது நடத்தையில் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கணவரின் கைபேசியில் சந்தேகத்திற்குரிய எண்கள் மற்றும் உரையாடல்களைக் கண்டு சாருல் தட்டிக்கேட்டபோது, அவர் கைபேசியை உடைத்து விட்டு, வெளியே சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார். மேலும், கணவர் ராவத், அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் சேர்ந்து சாருலை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்ததோடு, விஷம் வைத்துக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, 2025 டிசம்பர் 17 அன்று இரவு சாருலைத் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்ற முயன்றதால், அவர் தனது பெற்றோர் வீட்டிற்குத் தஞ்சம் புகுந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, காவலரான ஹரிஷ் குமார் ராவத் மீது வரதட்சணைக் கொடுமை உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்ட அதிகாரி ஹிமான்ஷு மாத்தூர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…
மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…