ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புது வண்ணாரப்பேட்டை வீரராகவன் தெருவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களான கலையரசன் மற்றும் டேனியல் ஆகியோரை மதுபோதையில் இருந்த பிரதீப் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த கலையரசன் மற்றும் டேனியல் ஆகியோர் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. பிரதீப் “சிவப்பு மஞ்சள் பச்சை”என சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் அவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
