actor Kamal Haasan

களிறே பிளிறு… எம்பி கமல்ஹாசனின் நாடாளுமன்ற உரை குறித்து பதிவிட்ட கவிப்பேரரசு வைரமுத்து பெருமிதம்!

By Elango on மாசி 6, 2026

Spread the love

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தனது முதல் உரையை நிகழ்த்தினர். அவரது ஆவேச பேச்சு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் கவிஞர் வைரமுத்து தனது பதிவில் கூறியிருப்பதாவது,

அன்புள்ள கமல் எம்பி அவர்களே, கன்னிப் பேச்சல்ல காளைப்பேச்சு ஒரு தேசியவாதியின் மொழி. ஆனால் தமிழ்த் சாதியின் குரல். நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது, தாடி சிங்கத்தின் தமிழ் கேட்டும் ஆங்கிலம் கேட்டும்; என்னை அறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டுவிரலும். களிறே பிளிரு! என்று நடிகர் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கவிஞர் வைரமுத்து தனது பதிவில் பெருமிதமாக கூறியிருக்கிறார்.