“செல்லம் மாமா கூட வாடா”… அம்மாவின் தம்பி என பாசத்துடன் பழகிய சிறுமி… நேரம் பார்த்து வேலையை காட்டிய காவலர்… அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

நாகப்பட்டினம் மாவட்டம் ஆழியூர் பகுதியை சேர்ந்த குணா (37) என்பவர் திட்டச்சேரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய உடன் பிறந்த சகோதரிக்கு நாகப்பட்டினத்தில் உள்ள ஒருவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத்துடன் நாகப்பட்டினத்தில் வசித்து வருகின்றார். குணாவுக்கு வேலையில் விடுமுறை கிடைக்கும் சமயத்தில் தனது சகோதரி வீட்டுக்கு அடிக்கடி சென்று சில நாட்கள் தங்கி விட்டு வருவார்.

இதனிடையே குணாவிடம் அவருடைய சகோதரியின் மூத்த மகளான 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது மாமா என்ற முறையில் நெருங்கி பழகி வந்துள்ளார். ஆனால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குணா தன்னுடைய சகோதரியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு குணா கொடுத்த பாலியல் தொல்லையை தாங்க முடியாத சிறு மீது தொடர்பாக குழந்தைகள் நல குழுமத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் 12 ஆம் வகுப்பு மாணவி, அவருடைய தாய் மற்றும் காவலர் குணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குணா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரியின் மகளை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“6 நாட்களாக எங்கே போனார் செந்தில் பாலாஜி?”…. லுக் அவுட் நோட்டீஸ் பின்னணியில் இருக்கும் தமிழக அரசியல் பூகம்பம்…. அர்ஜுன் சம்பத் உடைத்த அதிரடி உண்மை….!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

27 seconds ago

BIG BREAKING: “பதவியை ராஜினாமா செய் இல்லனா”…. மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மிரட்டல்?… வெளியான பகீர் ஆடியோ….!

திமுகவுக்கு எதிரான குதிரை பேர வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆடியோ சர்ச்சை…

8 minutes ago

தலைமைச் செயலகத்தில் திடீரென பதறிய அன்புமணி ராமதாஸ்.. அமைச்சர் ஆனந்த் செய்த ‘அந்த’ காரியம்… அதிர்ச்சி திருப்பம்…..!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விழிப்புணர்வு…

12 minutes ago

“ஆட்சியை கவிழ்க்க சதி”…. செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு வலைவீசும் போலீஸ்…. சற்றுமுன் ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது…

18 minutes ago

யாரெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்?… அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடி விபரம்…!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…

38 minutes ago

72 உயிர்கள்… 1153 கடைகள் காலி… 11 வயது சிறுவன் செய்த விபரீதம்… கராச்சி தீ விபத்தின் வெளியான அதிர்ச்சி உண்மை…!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…

59 minutes ago