சீனியர்களுக்கு ‘நோ’ சொன்ன அன்புமணி… தைலாபுரத்தில் மீண்டும் வெடித்த குடும்பப்போர்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

By Visaka on ஆடி 12, 2026

Spread the love

தைலாபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸால் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முரளிசங்கர் உள்ளிட்டோருக்கு இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவராலேயே நியமிக்கப்பட்ட செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோருக்கு அழைப்பு மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தால், தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே மீண்டும் உட்கட்சி அதிகாரப் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் வெடித்துள்ளதாகவும், இந்த கடுமையான உரசலின் காரணமாகவே தற்போதைய கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.