“என் அக்கா கூட எதுக்குடா பேசுற”.. பிளஸ் 2 மாணவனை அரிவாளால் வெட்டிய 10th மாணவன்.. நெல்லையில் அடுத்த பயங்கரம்…!

Spread the love

நெல்லையில் சமீபத்தில் கவின் என்பவர் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் முடிவடையாத நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றான். இவனுக்கு அதே ஊரை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவருடன் ஒரே வகுப்பில் படித்து வருவதால் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் வகுப்பு முடிந்து வீட்டுக்கு சென்ற பிறகும் அந்த மாணவர் செல்போனில் மாணவியுடன் மணி கணக்கில் பேசி வந்துள்ளார்.

இந்த விவகாரம் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியின் 15 வயதான தம்பிக்கு தெரிய வர ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தனது அக்காவுடன் பேசுவதை நிறுத்துமாறு அந்த +2 மாணவனிடம் அடிக்கடி மிரட்டல் விடுத்துள்ளார்.. ஆனால் அந்த மாணவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து மாணவியுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தம்பி அப்பாவுடன் பழகும் பிளஸ் 2 மாணவரை தாக்குவதற்கு திட்டமிட்ட நிலையில் தனது வகுப்பில் படிக்கும் நண்பரான 15 வயது சிறுவனிடம் கூறி இருவரும் சேர்ந்து அதே பகுதியில் வசிக்கும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுவர்கள் மூன்று பேரிடம் சென்று பேசி திட்டமிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவில் மாணவியின் தம்பி உட்பட ஐந்து சிறுவர்கள் சேர்ந்து பிளஸ் டூ மாணவனின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து உங்களுடன் பேச வேண்டும் என்னோடு வாருங்கள் என்று அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தெருவின் ஓரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த மாணவரை அழைத்துச் சென்று பிறகு சற்றும் தாமதிக்காமல் மனைவியின் தம்பி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிளஸ் டூ மாணவனை வெட்டினர். இதில் அவருடைய கையில் வெட்டுக்காயம் பட்ட நிலையில் உடனே அலறியுள்ளார்.

இதனால் ஐந்து சிறுவர்களும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவனின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை வெட்டிய மாணவியின் தம்பி உட்பட ஐந்து சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஒரே ஒரு ஓட்டு… சரிந்தது திமுக கோட்டை”… திருப்பத்தூரில் நடந்த அந்த நடுக்கடலோர அதிசயம்… கடைசி நொடியில் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு நேர்ந்த அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதி ஒரு மிகப்பெரிய அரசியல்…

7 seconds ago

யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட்..! தளபதிக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த அந்த நபர்… 234 தொகுதிகளிலும் நடந்த ரகசிய ஆபரேஷன் … அம்பலமாகும் உண்மைகள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் அசுர வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிக்கும் பின்னால் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் நுணுக்கமான வியூகங்கள் முக்கியப்…

57 seconds ago

திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமே இதுதான்… கடைசி நேரத்தில் தலைகீழாக மாறிய கணக்கு – அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக எதிர்கொள்ளும் இந்தச் சவால்கள் அதன் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உருவெடுத்துள்ளன.…

5 minutes ago

108 தொகுதிகளில் வெற்றி.. ஆனால் கஜானா காலி… தங்க மோதிரம், இலவச சிலிண்டர் திட்டங்கள் கனவு நிறைவேறுமா..? எப்படி சமாளிக்க போகிறார் விஜய்..?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் முன்னிலை…

5 minutes ago

விஜய்க்கு காத்திருக்கும் அமித்ஷாவின் ‘செக்-மேட்’… 107 இடங்கள் வெற்றியல்ல, பொறி?… டெல்லியின் ‘வெயிட் அண்ட் வாட்ச்’ வியூகம்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நடிகர்…

11 minutes ago

எனது மனச்சாட்சிக்கு உண்மையாக… சக்தியை மீறி உழைத்தேன்.. மு.க ஸ்டாலின் உருக்கம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை நோக்கிப் பயணிக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.…

12 minutes ago