“அதிகாரிகளையே தொடர்புகொள்ள முடியல”…. நேபாளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை… சட்டப்பேரவையில் வெளியான பகீர் தகவல்…!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் அங்கு சென்றுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழகச் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது தெரிவித்துள்ளார். பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தமிழக அரசு மிக தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

அங்குள்ள 34 தமிழர்களின் விவரங்களைப் பெறுவதில் தொலைத்தொடர்பு பாதிப்பால் தற்காலிகமாகச் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எஞ்சிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்கும் தொடர் நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். நேபாளத்தில் தவிக்கும் தமிழகச் சொந்தங்கள் அனைவரையும் மீட்டுப் பாதுகாப்பாகத் தாயகம் கொண்டு வர மத்திய அரசு மற்றும் நேபாளத்தில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து தமிழக அரசு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.