இரவோடு இரவாக விலகல்… அதிமுகவில் இருந்து 1,200 பேருடன் வெளியேறிய முக்கிய புள்ளி… இபிஎஸ்-க்கு அடுத்த தலைவலி….!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திருமயம் தொகுதி முன்னாள் அதிமுக வேட்பாளரான பி.கே. வைரமுத்து, கட்சித் தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்கள் சுமார் 1,200 பேருடன் கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்கள், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளராக ராமு என்பவரை புதிதாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மீதான கடும் அதிருப்தி காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, கட்சியின் தீவிர முகமாகச் செயல்பட்டு வந்த பி.கே. வைரமுத்துவின் இந்த திடீர் விலகல் புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது பின்னணியைத் தொடர்ந்து இன்னும் ஏராளமான ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து விலக உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள், கட்சித் தலைமைக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.