மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தின் கூரையில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் ஊறுகாய் பந்து (Pickleball) விளையாடிக்கொண்டிருந்த 32 வயது நபர், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி, கோலாலம்பூரில் உள்ள ‘பிளேயா ராக்கெட் கிளப்’ எனும் இடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. விளையாடிக்கொண்டிருந்தபோது, பந்து ஒன்று பாதுகாப்புத் தண்டவாளத்தைத் (Safety Railing) தாண்டி வெளியே சென்றது. அந்தப் பந்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்த இளைஞர், பாதுகாப்புத் தடையைத் தாண்டி குதித்துள்ளார்.
Pickleball Kills a Man:
Horrifying footage captured the moment a 32-year-old fell to his death during a game of pickleball in Malaysia.
“The deceased was playing pickleball on the third floor and had climbed over the court’s fence to retrieve a ball and fell to the lower floor” pic.twitter.com/RBjtmi307f
— ((Hurkle Durkling)) 🇺🇸🎗️🇮🇱 🤟 (@durklinghurkle) December 11, 2025
திறந்தவெளிப் பகுதியை மூடுவதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த வலையின் (Net) மீது அவர் குதித்தபோது, அவரது எடையைத் தாங்க முடியாமல் வலை அறுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர், மூன்று மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் சக விளையாட்டு வீரர்களிடையேயும், அங்கு கூடியிருந்த பார்வையாளர்களிடையேயும் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு மைதானங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகளின் அவசியம் குறித்து இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
