உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மஜித் என்ற வாலிபர், நாள் முழுவதும் தனது மொபைல் போனில் பப்ஜி கேம் விளையாடும் வழக்கம் கொண்டவர். தொடர்ச்சியாக கேம் விளையாடியதால் மொபைல் போன் அளவுக்கு அதிகமாகச் சூடாகி, கையில் பிடிக்க முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
இருப்பினும், அதை பொருட்படுத்தாத மஜித், சூடான அந்த மொபைல் போனை உடனடியாகத் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பாக்கெட்டில் இருந்து புகை வரத் தொடங்கி, திடீரெனப் போன் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அவரது கை மற்றும் ரகசிய உறுப்புப் பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த மொபைல் போன் வாங்கிய சில நாட்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. அளவுக்கு அதிகமாக கேம் விளையாடி போன் சூடானால், அதை உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…
திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி…
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…