ஷாக்கிங் நியூஸ்… மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 உயர்வு?… வெளியான பகீர் அறிக்கை…!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு மத்தியில், அடுத்த 2-3 வாரங்களுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ₹10 வரை உயரக்கூடும் என எம்கே குளோபல் நிதி நிறுவனம் கணித்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு ஒரே கட்டமாகவோ அல்லது பொதுமக்களுக்குப் பெரிய சுமை தெரியாதவாறு படிப்படியாகவோ அமல்படுத்தப்படலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விற்பனையில் லிட்டருக்கு ₹17 முதல் ₹18 வரை பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன; எனவே, வரவிருக்கும் இந்த ₹10 விலை உயர்வானது எண்ணெய் நிறுவனங்களின் தற்போதைய நிதி இழப்பை சுமார் 50% வரை குறைக்க உதவும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.