BREAKING: அதிரடி கைது.. CM விஜய் அரசு எச்சரிக்கை…. காலையிலேயே அலரும் தமிழகம்…!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

பழனி கோயில் நில விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக, வினோத் சூர்யகுமார் என்பவரை சென்னை சைபர் கிரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் இருவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் இணையதளங்களில் ஆதாரமற்ற போலிச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, இந்த நில முறைகேடு புகார் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்துள்ளது.