சாதனை வீரருக்கு ரயில் நிலையத்தில் நேர்ந்த சோதனை…! கெஞ்சிய பயிற்சியாளர்…!! 5 மணி நேர போராட்டத்திற்கு பின் நடந்த பரபரப்பு…!!

By Devi Ramu on தை 21, 2026

Spread the love

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய போல்வால்ட் சாதனையாளர் தேவ் குமார் மீனா, மங்களூரு போட்டியில் வென்றுவிட்டு தனது பயிற்சியாளர் மற்றும் சக வீரர்களுடன் இரயிலில் ஊர் திரும்பினார். தலா 5 மீட்டர் நீளம் கொண்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த போல்வால்ட் கம்புகளை அவர்கள் பயணிகள் பெட்டியில் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், கம்புகளின் நீளம் அதிகமாக இருப்பதாகக் கூறி, டிக்கெட் பரிசோதகர் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். சரக்கு பெட்டியில் அனுப்பினால் கம்புகள் சேதமடையும் என பயிற்சியாளர் எவ்வளவோ கெஞ்சியும் அதிகாரிகள் கேட்கவில்லை.

இந்த அதிகாரப்பூர்வ மோதலால் வீரர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இரயிலைத் தவறவிட்டு, அடுத்த இரயிலுக்காக 5 மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. இறுதியில் 1,875 ரூபாய் அபராதம் செலுத்திய பிறகே கம்புகளுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு தேசிய வீரருக்கே இந்நாட்டின் இரயில்வே நிர்வாகத்தால் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு உபகரணங்களை எடுத்துச் செல்ல தெளிவான விதிமுறைகளை இரயில்வே வகுக்க வேண்டும் என தேவ் குமார் மீனா வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.