இனி Call, Message க்கு தனித்தனியாக ரீசார்ஜ் செய்யணும்… TRAI அதிரடி உத்தரவு…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மொபைல் போன் ஆனது உடலில் ஒரு பாகம் போல ஆகிவிட்டது. எங்கு சென்றாலும் உன் கையில் மொபைல் போன் தூக்கி செல்வது மொபைல் போன் இல்லாத ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம். அப்படி ஒரு இடத்தை நம் வாழ்க்கையில் பிடித்து விட்டது இந்த மொபைல் போன். தற்போது சமீபத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களான airtel jio போன்றவை தங்களது சேவை கட்டங்களை உயர்த்தியது. இது வாடிக்கையாளர்களை வருத்தமடைய செய்தாலும், BSNL இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு தங்களது சேவை கட்டணத்தை குறைத்தது. இதனால் பல வாடிக்கையாளர்கள் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களிலிருந்து BSNL க்கு மாறினார்கள்.

தற்போது அதையும் தாண்டி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அது என்னவென்றால் இனி கால் மற்றும் மெசேஜ்களுக்கு தனித்தனியாக ரீசார்ஜ் செய்யும் வகையில் உண்டான திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். அடுத்த 30 நாட்களுக்குள் இதை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறது. இந்த செய்தியை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

ஏனென்றால் முந்தைய காலகட்டத்தில் இணைய பயன்பாடு அதிகமாக இல்லாத நேரத்தில் கால்களுக்கும் மெசேஜ்களுக்கும் கட்டணம் செலுத்தி தான் வாடிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். இத்தனை நிமிடங்கள் தான் பேச வேண்டும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இவ்வளவு ரூபாய், ஒரு நாளைக்கு 100 மெசேஜ் தான் என்று கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தும்போது இலவச இணையம் மற்றும் இலவச அழைப்பு என்று அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தில் இலவசமாக இணையம் பயன்படுத்துவது கால்கள் எஸ்எம்எஸ் என அனைத்தையும் கொடுத்து மக்களை பழக்கி விட்டார்கள். இப்போது தனித்தனியாக கால்களுக்கும் மெசேஜ்களுக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும்.

TRAI இந்த முக்கிய முடிவை ஏற்பதற்கான காரணம் என்னவென்றால் பல பயனர்கள் ஒரே மொபைலில் இரண்டு சிம் கார்டை பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு சிம் மட்டுமே முழுமையாக செயல்படுகிறது. மற்றொரு சிம்மில் குரல் மற்றும் எஸ்எம்எஸ்க்கு பயன்படுத்தும் வகையில் தேவையில்லாமல் வைத்திருக்கிறார்கள். மொபைல் எண்கள் அரசின் சொத்து என்பதால் தொலைதொடர்பு நிறுவனங்கள் சரியாக இந்த மொபைல் எண்களை பயன்படுத்த வேண்டும் மக்கள் தேவையற்ற சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என்பதற்காக TRAI இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதனால் ரீசார்ஜ் கட்டணம் எவ்வளவாக இருக்கும் என்பது வாடிக்கையாளர்கள் மனதில் ஒருவித கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

admin

Recent Posts

“ஜனநாயகன் வந்தா எனக்கென்ன…?” பச்சிளம் குழந்தைக்கு பால் இல்ல…! கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகமா…? விளாசிய வேல்முருகன்….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவினாலும், தற்போதைய…

4 minutes ago

சிக்கலுக்கு மேல் சிக்கல்..! ‘ஜன நாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு… டெல்லிக்கு விரையும் விஜய்..?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த சிபிஐ விசாரணை 2026 ஜனவரியில்…

31 minutes ago

தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் பிரபலம் காலமானார்… “சொல்லின் செல்வருக்கு” அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இனியன் சம்பத்   இன்று   காலமானார். 'சொல்லின் செல்வர்' என்று போற்றப்படும் ஈ.வி.கே.…

1 மணத்தியாலம் ago

BREAKING: பராசக்தி படத்திற்கு சிக்கல்… இந்தி வசனத்திற்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில்…

1 மணத்தியாலம் ago

இன்றுதான் ஒரு படத்தை Censor Board தடுத்து நிறுத்தி இருக்கிறதா..? அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நிற்கவில்லையா..? ஜனநாயகன் குறித்த கேள்விக்கு பாஜக நிர்வாகி சரத்குமார் அதிரடி..!!

பாஜக நிர்வாகி சரத்குமார், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு (Censor Board) தடை விதித்தது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில்…

2 மணத்தியாலங்கள் ago

நகைக் கடன் பெரும் முறையில் புதிய மாற்றம்.. RBI கொடுத்த முக்கிய அப்டேட்..!!

2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள், நகைக் கடன் பெறும் முறையில் முக்கிய…

2 மணத்தியாலங்கள் ago