வைரமுத்து எழுதுன பாட்டுப் பிடிக்காமல் பாடல் ஆசிரியரை மாற்றிய இயக்குனர் விக்ரமன்… ஏ ஆர் ரஹ்மானின் ரியாக்‌ஷன் இதுதானாம்!

By vinoth on ஆவணி 19, 2024

Spread the love

1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

   

அவர் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான திரைப்படம் புதிய மன்னர்கள். அந்த படத்தில் மாணவர்கள் அரசியலைப் பேசியிருந்தார். நல்ல எதிர்பார்ப்பிருந்தும் அந்த படம் வெளியான போது படுதோல்வி அடைந்தது. ஆனாலும் இன்றளவும் அந்த படத்தின் பாடல்கள் பெரியளவில் கொண்டாடப்படுகின்றன.

   

விக்ரமனோடு, ஏ ஆர் ரஹ்மான் இணைந்து பணியாற்றிய ஒரே படம் இதுதான். இந்த படத்தில் ஒரு பாடலை தன்னுடைய ஆஸ்தான் பாடல் ஆசிரியரான வைரமுத்துவை எழுத வைத்துள்ளார் ரஹ்மான். ஆனால் அந்த பாடல் வரிகள் இயக்குனர் விக்ரமனுக்குப் பிடிக்கவேயில்லையாம்.

 

இதனால் அவர் ரஹ்மானிடம் “நான் ஒரு பாடல் ஆசிரியரை அனுப்புகிறேன். அவர் பாடல் எழுதட்டும். உங்களுக்குப் பிடித்தால் அதைப் பயன்படுத்தலாம் என்று சொல்லியுள்ளார். அப்படி வந்தவர்தான் பழனிபாரதி. அவர் எழுதிய பாடல்தான் ‘நீ கட்டும் சேல மடிப்புலதான் கசங்கிப் போனேண்டி’ பாடல். அந்த வரிகள் ரஹ்மானுக்குப் பிடிக்கவே, அதையே பயன்படுத்தியுள்ளார்.

இந்த தகவலை புதிய மன்னர்கள் படத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்த பாவா லட்சுமணன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.