#image_title
காலத்தால் அழியாத பல தத்துவ பாடல்களை நமக்கு தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சிறந்த தமிழ் அறிஞர், சீர்த்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியது தான் இவருடைய சிறப்பு. 19 வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர், உணர்ச்சிகளை தனது கவிதையில் கொட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசை கனவுகளையும், ஆவேசத்தையும், பாடல்களாக வடித்தவர். திரையுலகில் 180 பாடல்களையே எழுதினாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக அமைந்தவை.
எம் ஜி ஆருக்கு கண்ணதாசன் மற்றும் வாலிக்கு முன்பாக ஆஸ்தான பாடல் ஆசிரியராக விளங்கியவர் பட்டுகோட்டையார்தான். ஆனால் தன்னுடைய 29 ஆவது வயதிலேயே அவர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்ததால் அவரின் சினிமா வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்தது.
சினிமா ஆசையில் சென்னை வந்த பட்டுக்கோட்டைக்கு முதலில் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை. இதனால் அவர் சிறிதுகாலம் வறுமையில் வாடியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு வந்துள்ளது. கடவுள் நம்பிக்கை இல்லாத பட்டுக்கோட்டையாரிடம் கடவுளை வாழ்த்தும் வகையில் ஒரு பாடல் வேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர் கேட்டுள்ளார்.
தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அந்த பாடலை எழுதமாட்டேன் என்று நேரடியாக சொல்லவும் அவருக்கு மனமில்லை. ஏனென்றால் முதல் முதலாக தனக்கு பாட்டெழுத வந்துள்ள வாய்ப்பு இது. அதே நேரத்தில் தனது கொள்கையையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற இரட்டை மனநிலையில் இருந்துள்ளார். இப்படி யோசித்து கடைசியில் பாடலை எழுதியுள்ளார்.
பாடலின் முதல் வரிகளே ‘’நல்லாருக்கும் பொல்லாருக்கும் நடுவில் இருக்கும் சாமி, நீ கல்லா போன காரணத்தை எல்லோருக்கும் காமி’’ என்று எழுதி கொடுத்துள்ளார். இந்த வரிகளை படித்து பார்த்த அந்த தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டாராம். உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனால் அந்த பாடலை தன் படத்தில் பயன்படுத்தவும் இல்லை.
இதன் பிறகு அவருக்கு மகேஸ்வரி என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படத்தின் பாடல்கள் வெற்றி பெற தொடர்ந்து பல படங்களில் பாட்டெழுத அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…