அரையாண்டு விடுமுறை… சொந்த ஊர் செல்வோருக்கு ஷாக்… 2 மடங்கு உயர்ந்த பேருந்து கட்டணம்…!

By Nanthini on மார்கழி 21, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி உடன் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதனிடையே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து நெல்லைக்கு வழக்கமாக 1800 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது 4500 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே சென்னையில் இருந்து கோவைக்கு 5000 ரூபாய், சென்னையில் இருந்து மதுரைக்கு 4000 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.