பீகாரைச் சேர்ந்த தம்பதியினர் வேலை தேடி குஜராத்தின் முண்ட்ரா பகுதிக்கு வந்து தங்களது 14 மற்றும் 11 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வந்தனர். கடந்த ஜனவரி 15 அன்று விளையாடச் சென்ற இரு சிறுவர்களும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம் பக்கத்திலும், உறவினர்களிடமும் தேடியும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் நம்பிக்கையை இழக்காத பெற்றோர், தங்கள் குழந்தைகள் பிச்சை எடுக்கும் கும்பலிடம் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகப்பட்டனர்.
பிள்ளைகளைக் கண்டுபிடிக்கத் தங்களது வேலை, வாழ்வாதாரம் என அனைத்தையும் துறந்த அப்பெற்றோர், பிச்சைக்காரர்களைப் போல வேடமணிந்துகொண்டனர். தெருத்தெருவாக அலைந்து திரிந்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் தீவிரமாகத் தேடினர். பல மாத போராட்டத்திற்குப் பிறகு, மூத்த மகன் பிச்சைக்கார கும்பலுடன் இருப்பதாக வந்த தகவலை வைத்து, ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் அவனைக் கண்டுபிடித்தனர்.
இருப்பினும் இளைய மகனுக்கான தேடல் தொடர்ந்தது. அடுத்த 15 நாட்களில், மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் இளைய மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டான். தங்கள் பிள்ளைகளை மீண்டும் பெற அடையாளம், வசதி, வாழ்க்கை என அனைத்தையும் பணையம் வைத்த அந்தப் பெற்றோரின் கண்ணீர் நிறைந்த போராட்டம், பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளே உலகம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…