Connect with us

“இனி சீரியலில் நடிக்க மாட்டேன்.. கதிரை ரொம்ப மிஸ் பண்றேன்”.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் வெளியிட்ட பதிவு..

CINEMA

“இனி சீரியலில் நடிக்க மாட்டேன்.. கதிரை ரொம்ப மிஸ் பண்றேன்”.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் வெளியிட்ட பதிவு..

 

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக டிஆர்பி-யில் ஓரளவிற்கு டாப்பில் இருந்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியல் பின்னர் அந்த அளவுக்கு வரவேற்பு தரவில்லை.

   

தமிழிலேயே உருவாக்கப்பட்ட இந்த சீரியல் பல மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுசித்ரா, ஹேமா, குமரன், ஜீவா, விக்ரம் சரவணன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். இந்த சீரியல் நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது. ரசிகர்களுக்கு இந்த தகவல் சற்று சோகத்தை கொடுத்திருக்கின்றது. அக்டோபர் 1 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரானது அக்டோபர் 28, 2023 ஆம் ஆண்டு முடிவடைந்து இருக்கின்றது.

கிட்டத்தட்ட 5  வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் நடித்த ஒவ்வொருவரும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் வெளியில் செல்லும்போதும் சீரியலில் உள்ள கதாபாத்திரத்தின் பெயரை வைத்து தான் கூப்பிட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு இந்த தொடர் மக்களிடையே மிகவும் நெருக்கமாக இருந்தது. இந்த சீரியல் முடிந்துவிட அதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா தனது youtube பக்கத்தில் கூட எமோஷனல் ஆக பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்த குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தான் கதிராக 5 வருடங்கள் வாழ்ந்ததை நினைத்து பெருமிதமாக கூறியிருந்தார். கதிர் கதாபாத்திரத்திற்கு மக்கள் கொடுத்த பேராதரவை தான் என்றும் மறக்க மாட்டேன் என்றும், தான் வெளியில் செல்லும்போது கூட அந்தப் பெயரை வைத்து தான் பலரும் என்னை அழைப்பார்கள்.

கதிர் கதாபாத்திரத்திற்கு நிறைய சப்போர்ட் மற்றும் நிறைய லவ் கிடைத்துள்ளது. இது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. இந்த பயணம் இத்தோடு முடிவதை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.  இனி என்ன செய்யப் போவது என்று தெரியவில்லை. அடுத்த சான்ஸ்காக தேடிக் கொண்டிருக்கின்றேன் என்று மிகவும் வருத்தமாக பதிவிட்டிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top