![pandavar illam 1 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/pandavar-illam-1.jpg)
CINEMA
ஆமா எனக்கும் நடந்திருக்கு.. அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து முதன்முறையாக மனம் திறந்த பாண்டவர் சீரியல் நடிகை…
பாண்டவர் இல்லம் சீரியல் மூலமாக பிரபலமான ஆர்த்தி சுபாஷ் தனக்கு சினிமா துறையில் ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கின்றார்.
youtube-களில் வெளியாகும் வெப் சீரியஸ்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி. அதன் பிறகு ஆதித்யா டிவியில் ஆங்கராக பணியாற்றத் தொடங்கினர். இதன் மூலமாக இவருக்கு பாண்டவர் இல்லம் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமில்லாமல் சென்னை மீம்ஸ் என்ற youtube சேனலில் சம்சாரம் அது மின்சாரம் என்ற சீரியஸிலும் நடித்திருக்கின்றார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டவர் இல்லம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். பாண்டவர் இல்லம் சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கின்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வருகின்றார்.
பாண்டவர் இல்லம் சீரியலில் லீட் ரோல் கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களுடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அந்த கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார் என பலரும் கூறி வருகிறார்கள். சமீபத்தில் இவர் தனது ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பற்றி பகிர்ந்திருந்தார் அதாவது காலேஜ் படிக்கும் போது பார்ட் டைமாக தான் நடிக்க தொடங்கினேன். தனக்கு பாக்கெட் மணிக்கு பணம் வருகிறது என ஜாலியாக நடிக்க தொடங்கினேன். இப்படி ஆரம்பித்த எனது கெரியர் ஒரு கட்டத்தில் ஸ்ட்ரெஸ் ஆக ஆரம்பித்த நிலையும் உண்டு.
ஒரு வேலையை வேலையாக செய்யும்போது அதில் இருக்கும் அழுத்தம் என்பதை உணர்ந்தேன். ஓவர் டைமில் வேலை பார்ப்பது, உணவு இல்லாமல் வேலை பார்ப்பது என்ற நிலை எல்லாம் உருவானது இப்படி பல கஷ்டங்களை சந்தித்தேன். சில நேரங்களில் அதிக கோபத்தில் காருக்குள் பயங்கரமா கத்தி கூச்சலிட்டு இருக்கிறேன்.
மேலும் மீடு போன்ற புகார்களில் சிக்கி உள்ளீர்களா என என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருந்த ஆர்த்தி எனது வாழ்க்கையிலும் அது போன்ற நிறைய நடந்துள்ளது. இல்லை என்று சொன்னால் அது பொய். கண்ணுக்கு முன் நிறைய பேர் பண்ற தப்புகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் பார்த்தும் பாக்காதது போல் கடந்து சென்று விடுகிறோம். யாருமே யாரையும் கட்டாயப்படுத்தி செய்ய சொல்வது கிடையாது. எல்லாம் அவங்க இஷ்டத்துக்கு தான் நடக்கின்றது. நான் யாருடைய வாழ்க்கையிலும் பெரிதாக தலையிட்டு கொள்ள மாட்டேன். அது எனக்கு பிடிக்காத ஒன்று” என்று அவர் பேசி இருந்தார்