உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி இருப்பதாகக் கூறி அழைத்துள்ளார். தலைவரின் அழைப்பை நம்பி அந்தப் பெண்ணும் அவருடன் சென்றுள்ளார்.
ஆனால், வழக்கமான பாதைக்குச் செல்லாமல் இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர். ஏற்கனவே பஞ்சாயத்து தலைவரின் நடவடிக்கைகள் மீது கடுமையான சந்தேகம் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர், யாருக்கும் தெரியாமல் அவர்களைத் தூரத்திலிருந்தே பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
காட்டுக்குள் அவர்கள் இருவரும் கள்ளக்காதலில் ஈடுபடுவதைப் பார்த்த கணவர், அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துச் சலசலப்பை ஏற்படுத்தினார். “காட்டுக்குள் என்ன அரசு வளர்ச்சிப் பணி நடக்கிறது?” எனக்கூறி நடந்த சம்பவங்களை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
