ஏன் உங்களுக்கு மனித வாடையே ஆகாதா…? முடிஞ்சா இத பண்ணுங்க விஜய்…. சவால் விட்ட கரு.பழனியப்பன்…!!

By Devi Ramu on மார்கழி 21, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியலில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து திமுகவைச் சேர்ந்த கரு. பழனியப்பன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகளுடன் மேடையில் நின்று பேசாமல், பேருந்தில் இருந்தபடி அவர் பேசியதைச் சுட்டிக்காட்டிய பழனியப்பன், “உங்களுக்கு மனித வாடையே ஆகாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்யிடம் போதிய அரசியல் சிந்தனையோ அல்லது விரிவான சொல்லகராதியோ இல்லை என்றும், வெறும் 15 வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவர் காலத்தை ஓட்டுவதாகவும் சாடியுள்ளார். மேலும், தாள்கள் இல்லாமல் ஒரு நிமிடம் பெரியாரைப் பற்றி விஜய்யால் பேச முடியுமா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

   

விஜய்யின் பின்னால் கூடும் இளைஞர் கூட்டம் நல்வழிப்படுத்தப்பட வேண்டிய தற்குறிகள் என்றும், அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக் கூட வழிவிடாமல் இடையூறு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கட்சி ஆரம்பித்து ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தாத சூழலில், அதற்குள் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் வெடித்திருப்பது நல்லது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

   

முக்கியமான சமூகப் பிரச்சினைகளில் விஜய் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்காமல் மௌனம் காப்பது அல்லது மழுப்பலாகப் பேசுவது மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். சினிமா பாணியிலேயே அரசியலை அணுகுவது நீண்ட காலத்திற்குப் பலன் தராது என கூறியுள்ளார்.