அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வளைகுடா மற்றும் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலை முறைப்படி அங்கீகரித்து “ஆபிரகாம் உடன்படிக்கையில்” (Abraham Accords) கையெழுத்திட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் சவூதி, கத்தார், துருக்கியுடன் பாகிஸ்தானையும் குறிப்பிட்டு, இந்த மெகா அமைதி ஒப்பந்தத்தில் இணையுமாறு டிரம்ப் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாகிஸ்தான், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு அமையாதவரை, இஸ்ரேலை ஒருபோதும் நாடாக அங்கீகரிக்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு டிரம்பின் முதல் அதிபர் காலத்தில், அமெரிக்காவின் நேரடி மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவை ஏற்படுத்த இந்த ஆபிரகாம் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ போன்ற நாடுகள் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்கு முன்பாகவே இஸ்ரேலுடன் தூதரக மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடங்கின. தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், அமெரிக்காவின் சர்வதேச நிதி அழுத்தங்களுக்குப் பயந்து, எதிர்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
ஒருவேளை அமெரிக்காவின் பிரஷர் காரணமாக பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரித்தால், அதற்குப் புதியதொரு சட்டப்பூர்வ மற்றும் கொள்கை ரீதியிலான தலைவலி காத்துள்ளது. அதுதான் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் கொள்கை. உலகிலேயே பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் மட்டும்தான் “இந்த பாஸ்போர்ட் இஸ்ரேல் தவிர உலகின் அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும்” (This passport is valid for all countries of the world except Israel) என்ற வாசகம் மிக வெளிப்படையாக அச்சிடப்பட்டுள்ளது.
டிரம்பின் விருப்பப்படி ஆபிரகாம் உடன்படிக்கையில் பாகிஸ்தான் இணைய வேண்டுமானால், முதலில் தனது பாஸ்போர்ட்டில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரியை அடியோடு நீக்க வேண்டும். இல்லையெனில், ஒரு நாட்டை முறைப்படி ராஜதந்திர ரீதியாக அங்கீகரித்துவிட்டு, அதே நாட்டுக்குத் தங்களின் குடிமக்கள் செல்ல பாஸ்போர்ட்டில் தடை விதிப்பது என்ற விசித்திரமான சட்ட முரண்பாட்டை அது சர்வதேச அரங்கில் உருவாக்கும். சமீபத்தில் வங்கதேசம் சர்வதேச இ-பாஸ்போர்ட் தரநிலைகளுக்காகத் தனது பாஸ்போர்ட்டிலிருந்து இந்த “Except Israel” வரியை நீக்கியது போல, பாகிஸ்தானும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…