தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 23-ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையைச் செய்யும் வகையில், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் தேர்தல் தேதிகளுக்கு ஏற்ப விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 9-ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் விடுமுறை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
