இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான R.S.நாராயணன்(87) வயது முதிர்வின் காரணமாக காலமானார். இவர் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் பொருளாதாரம், புள்ளியியல் ஆய்வாளராக பணிபுரிந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். மேலும், வறட்சியிலும் வளமை, வாழ்வு தரும் வன வேளாண்மை, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட ஏராளமான பயனுள்ள நூல்களையும் எழுதியுள்ளார்.
இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவரின் இறுதி சடங்கு பிற்பகல் 12 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
