பள்ளி குழந்தைகளுக்கான ஆதார், பயோமெட்ரிக் அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும் படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்தியேக செயலை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஐந்து முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை மற்றும் கண் கருவிழி படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
