நள்ளிரவில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் முதல் மாவட்டமாக நாகை மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
