தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்யும். அதேசமயம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்யும். தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவுகிறது. இது அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகும். இதனைத் தொடர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில் இது நவம்பர் 25ஆம் தேதி அதாவது நாளை புயல் சின்னமாக உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது
