அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக மாற்றுவதற்காக அறிவித்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக இணைய உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
