“இனி எடப்பாடியார் வழி தான்” இரவோடு இரவாக மீண்டும் அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்.. குஷியில் EPS..!!

By Soundarya on பங்குனி 16, 2026

Spread the love

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததை விரும்பாத அவரது ஆதரவாளர்கள், மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திருவையாறு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர் பால்ராஜ் மற்றும் ராயம்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் இணைந்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி (EPS) இனிதே வரவேற்றார். வரவிருக்கும் தேர்தல் பணிகளில் அவர்கள் அனைவரும் மிகவும் திறம்படச் செயல்பட்டு, கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.