திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற்ற விழாவில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 50,000 பேர் திமுகவில் இணைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதே வேகத்தில் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டவர்களை உற்சாகத்துடன் வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் களப்பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்; இந்த திடீர் நிகழ்வு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியையும், ஈபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது.
