தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகின்றார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியல்களில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று ஜெயித்துக் காட்டியவர் தான் ஜெயலலிதா. கடுமையான சவால்களுக்கு மத்தியில் அரசியலில் அவர் வெறும் ஒன்பது ஆண்டுகளுக்குள்ளேயே பிரம்மிக்கத்தக்க எழுச்சியை பெற்று அசைக்க முடியாத ஒரு பெண் தலைவரானார். இதனிடையே ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அரசியல் தலைவர்கள் பலரும் அவரைப் போற்றி பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவை நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்று ஓபிஎஸ் தனது முடிவை அறிவித்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதாவை நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பேசிய ஓபிஎஸ், செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த பிறகு அவருடன் பேசவில்லை என்றும் தடாளடியாக கூறியுள்ளார். முன்னதாக வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி தனிக்கட்சி குறித்து அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று அறிவித்துள்ளதால் அவர் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…