தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வர மறுபக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வரவிடாது என்ற கருத்து தான் தற்போது நிலவுகிறது.
அதிமுகவிலிருந்து இபிஎஸ் மூலம் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் சசிகலா ஆகியோர் நால்வர் அணியாக உருவெடுத்து உள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர்கள் எந்த அணியில் இணைய போகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் நிலையில் அதற்கு இன்னும் விடை தெரியாமல் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் போடி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ்ஐ இந்த முறை திமுகவில் தூங்குகின்ற ஸ்டாலின் கூறியதற்கு பதிலடியாக ஓபிஎஸ் அவருடைய கருத்தை கூறி இருந்தார். போடி தொகுதியில் வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ் இந்த முறை திருவாடானை தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . திருவாடானை தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது அதனை பறிப்பதற்கு ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஓபிஎஸ்இ இந்த வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
