சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி தமிழகத்திற்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளதாகவும், அவரது சிறப்பான செயல்பாடுகளால் வரும் தேர்தலில் மீண்டும் அவரே முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் உறுதியாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போது திமுகவை எதிர்த்து அரசியல் செய்வதற்கு வேறு எந்தக் கட்சிக்கும் தகுதியோ வலிமையோ இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடிய ஓ.பி.எஸ், அவர் ஒரு சுயநலவாதி என்றும், தனது சுய லாபத்திற்காக அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தையே அடகு வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய செயல்பாடுகளால் அதிமுக பலவீனமடைந்துள்ளதாகவும், அதனால்தான் மக்கள் நலனை முன்னிறுத்தும் திமுகவில் தான் இணைந்ததாகவும் அவர் தனது பேட்டியில் விளக்கமளித்தார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…